கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 60-க்கும் மேல் சீட் கொடுத்தும், சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களிடையே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது, “காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் கொடுத்தால் வெற்றி பெறுமா என்ற திமுகவின் கவலைதான் இந்த சீட் குறைப்பிற்கு காரணம். வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துத்தான் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்குவதை கணிப்பார்கள். கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 60-க்கும் மேல் சீட் கொடுத்தும், சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்ததால் தற்போது சீட் குறைக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினுடைய தவறுதான்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை பிடித்த நமது வெற்றிக் கூட்டணி, இந்த தேர்தலில் 208 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் உருவான கட்சி காங்கிரஸ் கட்சி. ஆனால் வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய கட்சி பாஜக” என்றார்.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி