ஆம்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது புறவழிச்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பரந்தாமன் என்பவர் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ராஜனின் இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் 1.50 லட்சம் ரூபாய் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்து ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டுசென்று சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி