பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்க சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி-யை தடுத்து மிரட்டியதாக செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com