சென்னையில் தனியார் டைல்ஸ் நிறுவனம், 220 கோடி ரூபாய் அளவுக்கு வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திலிருந்து சுமார் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் தனியார் டைல்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் டைல்ஸ்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவல்படி, அந்நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை மாவட்டம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள் என 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதில், கணக்கில் காட்டப்படாத 8.30 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 120 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்திருப்பதையும், 100 கோடி ரூபாய் அளவில் போலி நிறுவனங்களில் பங்குகள் வைத்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Loading More post
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை