கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே 11-வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பால் மகேந்திரன் (38), இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த சூசை என்பவரும் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று பால் மகேந்திரன், சூசையை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார் அப்போது சூசை வீட்டில் இல்லாத நிலையில் தனிமையில் இருந்த அவரது மகள் 11-வயதே ஆன சிறுமியிடம் பால் மகேந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமி சத்தம் போடவே அவர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
சீண்டலில் சிறுமியின் உடலில் லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து சூசை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு பால் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்