உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீன நாட்டில் வறுமை என்பது முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஜின்பிங். கடந்த 40 ஆண்டு காலமாக வறுமையை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திற்கும் கிடைத்த பலன் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் நடந்த பொது நிகழ்வில் அவர் பேசியபோது இதை தெரிவித்துள்ளார்.
சுமார் 770 மில்லியன் மக்கள் அரசின் முயற்சியால் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் வறுமையை முற்றிலும் ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபை 2030 வரை கெடு கொடுத்திருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே சீனா அதை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 98.99 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளிவந்துள்ளதாகவும், இதில் ஊரக பகுதியை சேர்ந்த மக்களும் அடங்குவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் சீனா உலக நாடுகளுக்கு மத்தியில் மீண்டும் ஒரு அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளதாகவும், இது வரலாற்றில் நிச்சயம் இடம் பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சீன அரசு கடந்த 8 ஆண்டுகளில் 246 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி