அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில், எல்.ஐ,சி மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுகொள்ளும் என்று நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, குடும்ப தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ. 2லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ. 4 லட்சமும், நிரந்தர இயலாமைக்கு ரூ. 2 லட்சமும் காப்பீடு வழங்கப்படும். இந்த புதிய திட்டத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தகுதியான 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?