தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, பூஜ்ஜியம் புள்ளி 48 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தாலும், தற்போதைய நிலை அச்சம் தருவதாக இருப்பதாக, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதிய தலைமுறையுடன் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா தொற்று சில வாரங்களாக 450 க்கும் குறையாமல் உறுதியாகி வருவதாகக் கூறினார். தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதியாவது அதிக அளவில் காண முடிவதாக அவர் கூறினார்.
ஐதராபாத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறித்து எச்சரிக்கை தெரிவித்த அவர், மக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை நிறுத்திவிட்டதாக அதிருப்தி தெரிவித்தார். அந்த வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு தமிழக மக்களை அறிவுறுத்திய ராதாகிருஷ்ணன், இல்லையெனில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் நேரிடும் என்று எச்சரிக்கை தெரிவித்தார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி