கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதால், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 13 கர்நாடக நுழைவுப்பகுதிகளை மூடியது கர்நாடக அரசு.
அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை காரணமாக, வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 13 நுழைவு பகுதிகளை மூட கர்நாடக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையை தேவையற்றது என்று கேரள அரசு சார்பில் கூறப்பட்டுள்ள நிலையில், இது அவசியமானது என்று கர்நாடக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கர்நாடகாவிற்கான நுழைவு பகுதிகளில், கர்நாடக அதிகாரிகளால் தங்கள் வாகனங்கள் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர்."எல்லைகளை மூடுவதற்கான இந்த திடீர் முடிவு மற்றும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை வலியுறுத்துவது குறித்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பல்வேறு தேவைகளுக்காக சுதந்திரமாக எல்லைகளை கடக்க பயன்படுத்திய அனைவருக்கும் சொல்லப்படாத துயரங்களை இந்த முடிவு உருவாக்கப் போகிறது" என்று மக்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் கோவிட் -19 வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது எச்சரிக்கையுடன் கூடிய ஒரு நடவடிக்கையாக கர்நாடக அதிகாரிகள் செய்த செயலாக இருக்கலாம் என்று கேரள பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் கூறினார். இதற்கிடையில், காங்கிரஸ் மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் எல்லைகளில் போராட்டங்களை நடத்துகின்றன. "இது கர்நாடக அதிகாரிகளின் தேவையற்ற நடவடிக்கை மற்றும் இது மத்திய அரசின் திறத்தல் வழிகாட்டுதல்களை மீறுவதாகும்" என்று கர்நாடக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்.ஏ.நெல்லிக்குன்னு கூறினார். தற்போது, கேரளாவில் 58,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகள் உள்ளன.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?