விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரள வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்றையப் போட்டியில் உத்தரப்பிரதேசம் - கேரள அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய உத்தரப் பிரதேச அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அபிஷேக் கோஸ்வாமி, பிரியம் கர்க், அக்சதீப் நாத் ஆகியோர் அரைசதம் விளாசினர். ஆனால் இந்த ஆட்டத்தில் கேரள அணியின் ஸ்ரீசாந்த் அசத்தலாக பந்துவீசினார்.
இந்த ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் 65 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஐபிஎல் மேட்ச் ஃபிக்சிங்கில் சிக்கி ஸ்ரீசாந்த் 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத நிலையில் கேரள மாநிலத்துக்காக அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டக் அலி கோப்பையில் பங்கேற்று விளையாடினார். அந்தத் தொடரில் மொத்தமாக 18 ஓவர்களை வீசிய ஸ்ரீசாந்த் மொத்தம் 4 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். மேலும் ஒரு ஓவருக்கு 9.88 ரன்களை சராசரியாக கொடுத்தார்.
இதனையடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தார் ஸ்ரீசாந்த். ஆனால் ஸ்ரீசாந்தை எந்த அணியும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. இப்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரப்பிரதேச அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?