ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த இருவரில் ஒருவர் பெண் என தெரியவந்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் சாலையின் ஓரம் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். சம்பவத்தின் போது அவரது குழந்தைகளும் அவருடன் இருந்துள்ளனர். இருப்பினும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர் போலீசார்.
அம்மா உயிரிழந்ததை கூட உணர முடியாத அந்த மழலைகள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயை ‘அம்மா எழுந்திரி’ என சொல்வதை உள்ளூர்வாசி ஒருவர் கேமிராவில் பதிவு செய்து, அந்த உருக்கமான காட்சிகளை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு குழந்தையின் முகம், கை மற்றும் கால்களிலும் ரத்தம் படிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு குழந்தைக்களுக்கும் லேசான காயம் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை பார்த்த பலரும் குழந்தைகளுக்கு இணையம் மூலமாக ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
#مادر_بلند_شو
? pic.twitter.com/XhC2xsJ57B — Ejaz Malikzada - اعجاز ملکزاده (@EjazMalikzada) February 21, 2021
இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?