மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புனேவில் வரும் 28ஆம் தேதி வரை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 74 சதவீதத்துக்கும் மேலான பாதிப்பு கேரளா மற்றும் மகாராஷ்ட்ராவிலேயே பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவையை தவிர ஹோட்டல்கள், ரெஸ்ட்டாரென்ட்டுகள், கடைகளை இரவு 10 மணிக்குள் அடைக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புனேவில் பள்ளி - கல்லூரிகளுக்கு வரும் 28 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மகாராஷ்ட்ரா சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது, “ முகக் கவசம், தனிமனித இடைவெளி என கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்காததால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் நம்மை சுற்றியே உள்ளதால் மெத்தனமாக இருப்பது ஆபத்து. பொது முடக்கம் கொண்டுவருவது குறித்து எந்தத் திட்டமும் இல்லை. கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் “ என்று கூறியுள்ளனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!