கோவையில் நடத்தப்பட்டு வரும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் பாகன்கள் யானையை கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில், கோயில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் கடந்த 8 ஆம்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமல்யதாவை பாகன்கள் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தக் காட்சியில் இரு பாகன்களும் யானையை கடுமையாக தாக்குகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான யானை வலி தாங்க முடியாமல் பிளிறுகிறது.
பாகன் பேச்சை யானை கேட்காததால் என்பதால் யானை தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேசிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி