இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளதால் வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டில் வாரந்தோறும் நடைபெறும் சந்தையில் ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கேரள பகுதிகளிலிருந்தும் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். பொதுவாக, இந்த சந்தையில் வாரந்தோறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் மாடுகள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், மாடுகளை வாங்கவும், விற்கவும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தடை நீக்கப்பட்டுள்ளது. அதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே மாட்டுச் சந்தை மீண்டும் களை கட்டியுள்ளது. அதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!