தனுஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கர்ணன் படத்தில் 'கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோடு கூட்டி வாருங்க' என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை பாடிய கிடாக்குழி புதிய தலைமுறைக்கு அதுகுறித்து பேசியுள்ளார். “ சின்ன வயசில் இருந்து நான் பாடிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் என்னோட 55 வயதிற்குப் பின்புதான் எனக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் புகழுக்கு காரணம் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரையே சேரும். இந்த புகழ் பத்து விருதுகள் கொடுத்தது போன்ற சந்தோஷத்தை நான் உணர்கிறேன். ‘அம்மா நீங்க பாடுனது வேற லெவல்ல இருக்கும்மா. நான் உங்களை அம்மாவா பார்க்காம ஒரு ஆடியன்ஸா பாக்குறேம்மா‘ என்று சொல்லி என்னோட பொண்ணு விடிய விடிய அழுதாள். அதை என்னால் தாங்கவே முடியல. அது என்னை மிகவும் பாதித்தது. ஏன்னா பொண்ணு எனக்கு உசுரு. பாட்டு நல்ல இருக்குன்னு எல்லோரும் வாழ்த்துனாங்க. ஆனா என் பொண்ணோட வாழ்த்துகளை அதிசயமா பாக்குறேன்.”என்றார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?