தமிழகத்தில் நேற்றிரவு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குளிர்வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை பல இடங்களில் பரலாக மழை பெய்தது. எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தண்டையார்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.
திண்டுக்கல்லில் மாலை ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மிதமான பெய்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டையில் மாலை 5 மணி முதல் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால், நகரின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விக்கிரவாண்டி செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது.
இதனிடையே இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!