ஜெர்மனி நாட்டு அரசின் வேந்தரான அங்கெலா மெர்க்கெல் மாஸ்க்கை மறந்ததால் பதறியடித்துக் கொண்டு எழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. வூஹானில் கொரோனா பெருந்தொற்று பரவத்தொடங்கிய உடன் உலக பொது சுகாதார மையம் இந்த தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம் என தெரிவித்திருந்தது. அதையடுத்து பல்வேறு உலக நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஜெர்மனியில் இரண்டாவது அலை வீசி வருகிறது. கடந்த பிப்ரவரி 5 முதல் 18 வரையிலான 14 நாட்களில் மட்டுமே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் அங்கெலா மெர்க்கெல் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் மறந்து போய் தனது மாஸ்க்கை போடியத்தில் வைத்துவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்துள்ளார். சில நொடிகளில் தான் மாஸ்க் அணியவில்லை என்பதை உணர்ந்த அவர் உடனடியாக பதறியடித்து எழுந்து போடியத்தில் இருந்த மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டு இருக்கையில் வந்து அமருகிறார்.
German Chancellor Angela Merkel panics after forgetting her face mask pic.twitter.com/FGxhUTMzkE
— Reuters (@Reuters) February 19, 2021Advertisement
அவரது செயலை நெட்டிசன்கள் பரவலாக புகழ்ந்து வருகின்றனர். “நேர்மையான தலைவர், ஜெர்மனியர்கள் விதிகளை முறையாக பின்பற்றுபவர்கள்” என அந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் பறக்கின்றன.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'