மதுரையில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் பொடா சுரேஷை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கேரளாவில் மாவோயிஸ்ட் தலைவன் மணிவாசகர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதிச் சடங்கின்போது சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவலுக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு எதிராகவும் அரசு ஊழியர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக பொடா சுரேஷின்மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவோயிஸ்ட் விவேக் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பொடா சுரேஷை சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் மதுரையில் மடக்கி கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் காவல்துறைக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுரேஷ், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'