தஞ்சையில் இருபத்தி இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை வெண்ணாற்றங்கரை பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தஞ்சை வட்டாட்சியர் மற்றும் தஞ்சை மேற்கு காவல் துறையினர் விரைந்து சென்றபோது வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு சொகுசு காரில், இருபத்தி இரண்டரை கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்ததும் அதற்கு துணையாக இருசக்கர வாகனத்தில் சிலர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக காவல்துறையினர் சுதாரித்துக் கொண்டு அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முற்படும்போது தப்பிக்க முயன்றனர். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த தஞ்சை பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி, அம்மாபேட்டையை சேர்ந்த பாண்டியம்மாள், கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சங்கர் கணேஷ் மாத்தூரை சேர்ந்த ஹரி பாண்டி உள்ளிட்டோரை கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி