புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் என்று உருக்கமாக பேசினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதையொட்டி அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பாரதிதாசன் கல்லூரி மாணவிகளிடையே கலந்துரையாடினார்.
அப்போது, ‘’என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனால் எனது தந்தையை கொன்றவர்கள் மீது எந்தக் கோபமும் இல்லை; நான் அவர்களை மன்னித்துவிட்டேன்’’ என்று உருக்கமாக பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில், 7 பேர் விடுதலைக் குறித்து முடிவெடுப்பது தொடர்பாக குழப்பம் நிலவிவரும் நிலையில் ராகுல்காந்தி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!