மதுரை சிம்மக்கல்லில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை, திமுக தலைவர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் பொது இடத்தில் கருணாநிதிக்கு முதல் முறையாக மதுரையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு திமுக சார்பில் மதுரை சிம்மக்கல் ரவுண்டானா பகுதியில் ஒன்பதரை அடியிலான முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திமுக தலைவருக்கு, மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி வெள்ளி செங்கோலை வழங்கினார். சிலையை வடிவமைத்த திருவள்ளூரை சேர்ந்த தீனதயாளனுக்கு மு.க.ஸ்டாலின் மோதிரத்தை பரிசாக வழங்கினார். தமிழகத்தில் கருணாநிதிக்கு பொது இடத்தில் முதன்முறையாக மதுரையில் மட்டுமே சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி