ராகுல்காந்தி ஒரு பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியிருக்கிறார்.
ராகுல்காந்தி திருமணம் செய்துகொள்ளாதது மீண்டும் ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசியபோது, ’’நாம் இருவர் நமக்கு இருவர்’’ என்றுதான் அரசு செயல்படுகிறது என விமர்சித்து பேசினார்.
ராகுலின் இந்த கருத்தை விமர்சித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ‘’நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வாக்கியம் குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரத்திற்குத்தான் பயன்படுத்தப்பட்டது. அதை ராகுல் விளம்பரப்படுத்த விரும்பினால் அதற்கு முதலில் திருமணம் செய்துகொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தியின் சாதி மறுப்பு கொள்கையை நிறைவேற்றும் விதமாக பட்டியலினப் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள வேண்டும். பின்பு இளைஞர்களை ஊக்குவிக்க இதைப் பயன்படுத்தலாம்’’ என்று விமர்சித்தார்.
ராம்தாஸ் 2017-ஆம் ஆண்டே, ’’ராகுல்காந்தி பட்டியலினத்தவர்களின் வீடுகளுக்கு செல்கிறார். அங்கு உணவு சாப்பிடுகிறார். அவர் இன்னும் ஒருபடி மேல் சென்று மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும். அவர் ஒரு பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும்’’ என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?