அமெரிக்காவிலிருந்து ரூ.16 கோடி மதிப்புள்ள மருந்து வாங்க தேவையான பணத்தை குழந்தையின் பெற்றோர் க்ரவுட் ஃபண்டிங் மூலமாக திரட்டினர்.
மும்பையைச் சேர்ந்த பிரியங்கா, மிஹிர் தம்பதியின் 5 மாதக் குழந்தை தீரா காமத். இந்தக் குழந்தை மிகவும் அரிதான 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி' (டைப்1) எனும் நோயால் மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால், குழந்தையின் நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தசைகள் செயல்படாமல் போயின. இந்தக் குழந்தைக்கு மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைக்கு தேவைப்படும் மருந்தான ஜோல்ஜென்சிமா எனும் மருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இந்த மருந்தின் விலை ரூ.16 கோடி ஆகும். இந்தியாவில் இந்த மருந்து ஜிஎஸ்டி வரியாக 12 சதவீதம், இறக்குமதி வரி 23 சதவீதம் என மொத்தம் ரூ.6 கோடிவரை விதிக்கப்படும்.
குழந்தையின் மருத்துவச் செலவுக்காக பிரியங்கா, மிஹிர் தம்பதி இருவரும் க்ரவுட் ஃபண்டிங் மூலம் நிதியுதவி கேட்டதில் ஏராளமான நிதி சர்வதேச அளவில் குவிந்தது. இதனிடையே குழந்தையின் உயிரைக் காக்கும் பொருட்டு மருந்துக்கான இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மருந்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீரா காமத்தின் பெற்றோர் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடியின் உத்தரவின் பெயரில் குழந்தையின் உயிர்காக்கும் மருந்துக்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரி என ரூ.6 கோடியை தள்ளுபடி செய்தும், மருந்துகளை விரைவாக விடுவிக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தங்களின் குழந்தையின் உயிர்காக்கும் சிகிச்சைக்காக நன்கொடை வழங்கியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர் பிரியங்கா, மிஹிர் தம்பதியினர்.
''5 மாத குழந்தைக்காக உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரூ.100 முதல் 5 லட்சம் வரை நன்கொடைகளை வழங்கினர். கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணையத்தின் மூலம் நன்கொடை அளித்தனர். வசதியானவர்களால்கூட ரூ.12 கோடிக்கு செலவு செய்து மருத்துவம் செய்ய முடியாத சூழலில் பலரின் உதவியால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் குழந்தைக்கு உதவி கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் எங்களது மகளின் உயிர்காக்கும் மருந்துக்காக நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றனர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி