ஓபிசி இட ஒதுக்கீட்டை 4 வகைகளாகப் பிரித்து 2, 6, 9, 10 சதவீதங்களில் உள் ஒதுக்கீடு வழங்க ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு எனப்படும் ஓபிசி வகுப்பில் மொத்தம் 2,633 சாதிப் பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவினருக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் மொத்தம் 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இச்சூழலில், ஓபிசி பிரிவுகளுக்கான இந்த 27% இட ஒதுக்கீட்டை 2%, 6%, 9%, 10% என 4 வகையாகப் பிரித்து, உள் ஒதுக்கீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிசி பிரிவில் உள்ள ஒருசில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பலனடைவதாக புகார் எழுந்ததால், இந்த பரிந்துரையை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீட்டில், தொகுப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்துப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையம்தான், நீதியரசர் ரோகிணி ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி