டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழக பாரம்பரியத்தை காக்கும் பொருட்டும் மாட்டு வண்டியில் சென்று தம்பதியினர் திருமணம் செய்து வந்தனர்.
திருமணம் என்றாலே ஆடம்பர கார்களின் அணிவகுப்பு என்ற காலம் போய் முன்னோர்களின் வழியான மாட்டுவண்டி, குதிரை வண்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தற்போது இளைஞர்களால் மீண்டும் தளிர்விட துவங்கியுள்ளது. அதன் எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி மாவட்டம் அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மலவிளை பகுதியில் வின்சென்ட் என்பவரின் மகன் விஜூ. வெளிநாட்டில் உள்ள உணவகத்தில் வேலை செய்யும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயசாமிலி என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கபட்டு, இன்று மலவிளையை அடுத்த பெனியல் சிஎஸ்ஐ தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு மணமகன் விஜூ மாட்டு வண்டியில் தேவாலயத்திற்கு வந்து மணமகள் ஜெயசாமிலியை திருமணம் செய்து அதே மாட்டுவண்டியில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் இது குறித்து மணமகன் விஜூ கூறியதாவது, தமிழக பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காளை மாடுகளை அழியாமல் பாதுகாக்கவும் டெல்லியில் சுமார் 80 நாட்களுக்கு மேலாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் எளிமையான முறையில் விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் காளை மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்ததாக கூறினார்.
உற்றார் உறவினர்கள் புடைசூழ மாட்டுவண்டியில் சென்ற தம்பதியரை அப்பகுதியினர் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.
Loading More post
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்