பாலாற்றில் தேங்கிய நீரை குடித்த சுமார் 3000 வாத்து குஞ்சுகள் உயிரிழப்பு. காரணம் குறித்து கால்நடை பராமரிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் சுதாகர் (38). இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாத்து வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேலூரை அடுத்த பெருமுகை பகுதி பாலாற்றங்கரையில் குடில் அமைத்து கடந்த 38 நாட்களாக தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்து குஞ்சுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் வாத்துக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று பாலாற்றில் குட்டை போல் தேங்கியிருந்த நீரை அருந்த வீட்டுள்ளனர். நீர் அருந்த ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வாத்து குஞ்சுகள் கொத்துக் கொத்தாக துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுதாகர் தண்ணீரில் இருந்து வாத்துக்களை மீட்டு கரையில் விட்ட போதும் சுமார் 7000 வாத்து குஞ்சுகள் உயிரிழந்துள்ளது.
இது குறித்து சுதாகர் கூறுகையில் வாத்துகள் முழுவதுமாக வளர 100 நாட்கள் ஆகும். தற்போது இறந்த வாழ்த்துக்கள் 38 நாட்கள் ஆனவையாகும். வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்று தண்ணி காட்டிய உடனேயே இறந்து விட்டது. என்ன காரணம் என தெரியவில்லை. கடன் வாங்கி வாத்துக்களை வளர்த்து வருகிறோம். இதனால் தங்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இது குறித்து வேலூர் மாவட்ட கால்நடை துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்த கால்நடை பராமரிப்பு துறையினர் உயிரிழந்த வாத்துகளை பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாத்துகள் அருந்திய தண்ணீர் மாதிரியையும் எடுத்து சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அதிகாரிகள் தெரிவிக்கையில் வாத்துக்கள் பறவை காய்ச்சலால் உயிரிழக்க வாய்ப்பு குறைவு இருந்த போதும் வேறேதும் காரணங்களுக்காக உயிரிழந்திருக்கலாம் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வாத்துகளின் உடற்கூறு ஆய்வு மற்றும் தண்ணீர் மாதிரி முடிவுகள் வந்த பின்னரே முடிவு தெரியவரும் என கூறினர்.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி