”சிலரின் செயல்கள் என்னை வருத்தமடைய செய்கிறது” - நடிகர் அஜித் அறிக்கை

”சிலரின் செயல்கள் என்னை வருத்தமடைய செய்கிறது” - நடிகர் அஜித் அறிக்கை
”சிலரின் செயல்கள் என்னை வருத்தமடைய செய்கிறது” - நடிகர் அஜித் அறிக்கை

நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'வலிமை' சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தப்படி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும்.

உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டிக்கு வந்த ரசிகர்கள் வலிமை அப்டேட் பதாகைகளுடன் வந்ததோடு, மைதானத்தில் முழக்கமிட்டனர். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com