இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஃபினிஷருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு ராஞ்சியில் உள்ள தனது விவசாய பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகிறார் அவர். பழங்கள், காய்கறிகள், கால்நடை வளர்ப்பு என படுபிஸியாக பண்ணையில் பணிகளை கவனித்து வருகிறார். அண்மையில் இங்கு விளைந்த விளைபொருட்களை ஏற்றுமதியும் செய்திருந்தார் தோனி.
இந்நிலையில் தோனி தனது பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களுடன் போட்டோ ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் தோட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் புன்னகைத்து நிற்கிறார் கேப்டன் கூலான தோனி.
வரும் 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வழிநடத்த உள்ளார் தோனி என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : OUTLOOK MAGAZINE
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?