சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ டாங்கை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ரூ. 8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து விமானத்தில் கிளம்பிய பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்றார்.
அப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை காரில் இருந்தபடியே ரசித்து சென்றார். பின்னர், சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ டாங் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ டாங்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்க மேடைக்கு சென்ற பிரதமர் மோடி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். கிருஷ்ணர் சிலையையை பிரதமருக்கு நினைவுபரிசாக கொடுத்தார் முதல்வர் பழனிசாமி.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'