கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் தொடங்கிவைத்த நிலையில், ஆய்வின் போது அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை தொல்லியல் துறையினர் பயன்படுத்த உள்ளனர்.
கீழடி, சிவகங்கை 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழர்களின் ஆதாரங்களை கொண்டது கீழடி. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆறு கட்ட அகழாய்வில் தமிழர்களின் மேன்மையை உலகறியச் செய்யும் வகையில் கட்டுமானங்கள், எச்சங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, கீழடி பண்டைய தமிழர்களின் தொழில் கூடமாகவும், கொந்தகை ஈமக்காடுகளாகவும், அகரம் மற்றும் மணலூர் வாழ்விடமாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விடங்களில் தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் மனித முகம், தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி, முதுமக்கள் தாழி கிடைத்துள்ளன. மேலும் செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், நீர் வழிப்பாதை, தண்ணீர்த் தொட்டி, மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள், கருங்கல்லில் ஆன எடைக்கற்கள், கரிம மாதிரிகள், கிபி12ஆம் நூற்றாண்டின் தங்க நாணயம் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது 7ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது.
7ஆம் கட்ட அகழாய்வு பணியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தொல்லியல் துறையினர், பணியாளர்கள் உதவியுடன் நாளை (திங்கள்கிழமை) முதல் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.
ஆய்வின் போது அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்த உள்ளனர். குறிப்பாக பூமிக்குள் ஊடுருவி செல்லும் கருவியையும், கரிம பொருட்களை கண்டறிய பீட்டா என்ற கருவியையும் அகழாய்வில் பயன்படுத்த உள்ளனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி