இந்தியா இரண்டாவது டெஸ்ட்டின் முதல் பந்தில் இருந்தே தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. முதல் டெஸ்ட்டில் இந்தியா 277 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதமடித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலம் பேசிய ஜோ ரூட் "நாளையப் போட்டியில் முதல் பந்தில் இருந்தே விராட் கோலி எங்கள் அணிக்கு அழுத்தம் கொடுப்பார் என நம்புகிறேன். நாளையப் போட்டியில் டாஸ் எதுவாக இருந்தாலும் இது நடக்கும். உள்நாட்டில் பிரமாதமான சாதனைகளை செய்தவர் கோலி. இந்தத் தொடரின் எதாவது ஒரு தருணத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என கோலி்க்கு நன்றாகவே தெரியும்" என்றார்.
மேலும் "இலங்கையில் நடைபெற்ற போட்டியில் எப்படி வெற்றிப்பெற்றோமோ அதேபோல வெற்றியை இங்கும் தொடர விரும்புகிறோம். எப்படிப்பட்ட பிட்சாக இருந்தாலும் சரி, பயமில்லா கிரிக்கெட்டை விளையாடவே நாங்கள் விரும்புகிறோம். எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலே எங்களது அணுகுமுறை இருக்கும். இதுபோன்ற பார்முலாதான் எங்களுக்கு கடந்தக் காலங்களில் வெற்றியை தேடி கொடுத்தது" என்றார் ஜோ ரூட்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி