தமிழகத்தில் இந்தாண்டு மேலும் 246 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வழியே சிறப்பு விருந்தினராக வருவாய் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். அப்போது தகவல் தொழில் நுட்பத்துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது... "தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்திலும் தகவல் தொழில்நுட்பத் துறை தடையில்லாமல் செயல்பட்டது. தமிழகத்தில் உள்ள 18 ஐ.டி நிறுவனங்கள் வழியே 4 லட்சம் பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 90 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் வரும் ஆண்டில் மேலும் 246 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது" எனக் கூறினார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?