திருச்சி கரூர் பைபாஸ் சாலையில், ஏர்கலப்பையுடன் சாலையில் படுத்து மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திருச்சி கரூர் பைபாஸ் சாலையில், அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் ஏர் கலப்பையுடன் அண்ணாமலை நகரில் இருந்து பாஸ்போர்ட் சேவா மையம் 4 சந்திப்பு சாலை வரை பேரணி நடத்தினர். பின்னர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்
முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். நேற்று தமிழக முதல்வர் அறிவித்துள்ள இந்த பயிர் கடன் தள்ளுபடி என்பது செயல்வடிவம் பெற வேண்டும் எனவும் 110 விதியின் கீழ் அறிவிப்பாக இருக்க கூடாது எனவும் இந்த அறிவிப்பிற்கு நன்றியை தெரிவித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Loading More post
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்