திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளதாகவும், அவர் கோயிலுக்கு வழிபட வருவார் எனவும், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மூதாட்டி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள சம்பவம் விவாதப் பொருளாகியுள்ளது.நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயிலில், துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவர், 85 வயதான பட்டு என்ற மூதாட்டியை சந்தித்து பேசி நலம் விசாரித்தார்.அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உண்டா என அந்த மூதாட்டி கேள்வி எழுப்பினார். அதற்கு, ஸ்டாலின் கோயிலுக்கு வருவார் எனவும், பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் துர்கா ஸ்டாலின் பதிலளித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக அரசியல் களத்தில் பார்க்கப்படும் நிலையில், அவரது மனைவி தெரிவித்த கருத்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ