400 ரூபாய் கடனை பெற்றுக்கொண்டு அதனை செலுத்த தவறியதற்காக நண்பனை கொலை செய்த நபரை தானே போலீசார் கைது செய்துள்ளனர்.
தானே மாவட்டத்தின் உல்ஹஸ்நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலை செய்யப்பட்டவரிடம் கொடுத்த கடனை கொடுத்து விடுமாறு கொலையாளி பலமுறை கேட்டு வந்துள்ளார். இருப்பினும் கடன் தொகை வந்து சேராததால் இந்த விவகாரம் கொலையில் வந்து முடிந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
“கொலையானவரின் பெயர் பாஹிம். அவருடன் தான் கொலையாளி சோனு பணி செய்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள். வழக்கம் போல கடனை கொடுக்குமாறு செவ்வாய் அன்றும் சோனு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் சோனு, பாஹிமை பலமாக போஸ்டகம்பத்தில் தள்ளியுள்ளார்.
அதையடுத்து சம்பவ இடத்திலேயே பாஹிம் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து சோனுவை நாங்கள் கைது செய்துள்ளோம்” என ஹில் லைன் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி