குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டார்.
எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ணகாந்தி அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளரை முடிவு செய்யும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் துணைக்குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக வெங்கய்ய நாயுடு பதவி வகித்து வருகிறார். தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 19ல் நிறைவடைய உள்ள நிலையில், அந்த பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ல் நடைபெறுகிறது.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?