2020-ம் ஆண்டில் 4-5 மினி பட்ஜெட்கள் வழங்க வேண்டி இருந்தது. எனவே, இந்த பட்ஜெட் அந்த 4-5 மினி பட்ஜெட்டுகளின் ஒரு பகுதியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்துள்ளன.
2021-2022-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ''இன்று இந்த தசாப்தத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு, இந்த தசாப்தம் மிகவும் முக்கியமானது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற தேசத்தின் முன் ஒரு பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்த தசாப்தம் முழுவதையும் நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை மனதில் வைத்து, இந்த அமர்வில் அடுத்த 10 ஆண்டுகளை மையமாகக் கொண்ட விவாதங்கள் இருக்க வேண்டும். இதுதான் தேசத்தால் எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.
தொடர்ந்து பேசியவர், ''2020-ம் ஆண்டில் 4-5 மினி பட்ஜெட்களாக பொருளாதார நிதித் தொகுப்புகளை நாட்டு மக்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அர்ப்பணித்தார். அதன் ஒருபகுதியாகத் தான் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டும் இருக்கும் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி