எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தற்போது கைது செய்யப்பட்ட 4 பேர் உள்பட 81 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இதுவரை 159 படகுகளை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!