சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட பிரதமர் மோடி தயங்குகிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி 3வது நாளாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கரூர் சின்னதாராபுரத்தில் பேசிய ராகுல்காந்தி, “அனைத்து இந்திய மக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கவுமே நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் நரேந்திர மோடி தனக்கு விரிந்த மார்பு இருப்பதாக கூறி பெருமை பட்டுக்கொள்கிறார். ஆனால் சீன ராணுவம் இன்று இந்திய எல்லைக்குள் அமர்ந்திருக்கிறது. 1000 கி.மீ இந்திய எல்லை சீன ராணுவத்தால் கைப்பற்றப்படிருக்கிறது. 56 இன்ச் மார்பு உள்ள நரேந்திர மோடி, சீனா என்ற வார்த்தையைக்கூட சொல்லமுடியாதவராக இருக்கிறார். சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவராக இருக்கிறார் மோடி. கடந்த 4 மாதங்களாக சீனா என்ற வார்த்தையை அவர் எங்கும் உச்சரித்ததே கிடையாது.
சீனா இந்தியாவில் நுழைந்தபோது அப்படியாரும் வரவில்லை என மோடி பொய் சொன்னார். சில நாட்களுக்கு பிறகு சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் இருப்பதை இந்திய ராணுவ அமைச்சரும், இந்திய ராணுவமும் ஒப்புக்கொண்டார்கள். மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியதாலும், மக்களை பிரித்தாழ்வதாலும்தான் சீன ராணுவத்திற்கு இந்தியாவிற்குள் நுழைவதற்கான தைரியம் வந்தது” என்றார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?