டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றும் போது 10 வயது சிறுமி உயிரிழந்த காரணத்தால், இத்தாலிய தரவு தனியுரிமை கண்காணிப்புக் குழு, டிக்டாக்கில் சரிபார்க்கப்படாத பயனர்களின் கணக்குகளை முடக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தாலியின் சிசிலி நகரத்தின் பலேர்மோவில் ஒரு சிறுமி, டிக்டாக்கில் பிளாக்அவுட் சவால் என்று அழைக்கப்படும் சவாலில் பங்கேற்றதாகவும், அதனால் அவரது கழுத்தில் ஒரு பெல்ட்டை வைத்து, தனது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்யும் போது மூச்சுத்திணறி இறந்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்கள் இந்த அதிர்ச்சி தற்கொலை குறித்து விசாரணையை தொடங்கினார்கள், "பலேர்மோவைச் சேர்ந்த 10 வயது சிறுமியின் கொடூரமான வழக்கைத் தொடர்ந்து, டிக்டாக் நடவடிக்கைகளில் அவசர அவசரமாக தலையிட கண்காணிப்புக் குழு முடிவு செய்தது" என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒரு அதிகாரி கூறுகையில், வயது சரிபார்க்கப்படாத கணக்குகளைப் பயன்படுத்துபவர்கள், இனி டிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவேற்றவோ அல்லது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது என தெரிவித்தார்
13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பதிவை தடைசெய்ய டிக்டாக் உறுதியளித்திருந்தாலும், இந்த விதியைத் தவிர்ப்பது எளிது என்று இத்தாலி தரவு தனியுரிமை கண்காணிப்புக்குழு கூறியது. இதன் விளைவாக, டிக்டாக் சரிபார்க்கப்படாத பயனர் கணக்குகளை குறைந்தது பிப்ரவரி 15 வரை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இது தொடர்பாக சீனாவின் பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக்டோக்கிலிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி