ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள புல்லா மற்றும் கொமெரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த மர்ம நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எலுரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 22 பேர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர முதல்வர் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் எலுரு பகுதியில் மர்ம நோய் பரவியுள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் வலிப்பு, வாந்தி, மயக்கம் மாதிரியான அறிகுறிகள் இருந்துள்ளன. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வர் ஸ்ரீனிவாஸ். இதனிடையே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாமென சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?