தொல்லியல் ஆய்வுக்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் இன்று தொடங்கி, ஆளில்லா விமானம் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு இடத்தினை தேர்வுசெய்ய ஆய்வுப் பணிகள் தொடங்கின. தமிழ்நாட்டில் 2020- 21 ஆண்டிற்கான அகழாய்வு பணிகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் கீழடி, ஆதிச்சநல்லூரை போன்று 7 மாவட்டங்களில் உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம், மாளிகைமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வுக்கான இடத்தைத் தேர்வுசெய்யும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 18 கிலோ மீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் 4 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading More post
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
உ.பி.யில் பயங்கரம்.. பாஜக எம்.பி. மகன் மீது துப்பாக்கிச்சூடு
டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் -ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?