தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதியையும், செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதற்கான அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதை தொடர்ந்து, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி பொறியியல் படிப்புக்கான இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 21 ஆம் தேதி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மே 24 ஆம் தேதியும், எழுத்துத் தேர்வு ஜூன் 2 ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல், ஏப்ரல் 12 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு படிப்புக்கான முதல் செய்முறை தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதியும், எழுத்துத் தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை!
"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு!"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு
கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி!
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா? - உயர்நீதிமன்றம் அதிருப்தி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்