விவசாய தொழிலாளிகள், வீடு இல்லாத அனைவருக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், புதுப்பட்டினம், செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், விவசாய தொழிலாளர்கள் மற்றும் வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். கடுமையாக உழைக்கின்ற விவசாயிக்காகவே அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டதாகவும், இன்றும் விவசாயத்தில் ஈட்டும் வருமானத்தை ஒரு விவசாயியாக வருமான வரித்துறையினருக்கு கணக்கு காட்டிக்கொண்டிருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது தெரிவித்தார்.
திருப்போரூரில் நடத்தப்பட்ட பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர், பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலனுக்காகத் தான் பிரதமரை சந்திக்க சென்றதாகவும், ஆட்சியை தக்கவைக்க டெல்லி செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார். திமுகவினர்தான் குடும்ப நலனுக்காக டெல்லி செல்வது வழக்கமாக கொண்டிருந்ததாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும் அதிமுகவினர் மிட்டா மிராசுதாரர்கள் அல்ல எனக்கூறிய அவர், திமுகவினர் தான் கோடீஸ்வரர்கள் என பேசினார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?