கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்து இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகித்து வருகிறது. புனேவை மையமாகக் கொண்ட இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
சீரம் நிறுவனத்தின் முதலாம் முனையத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தீவிபத்தால் அந்த பகுதியே கருமண்டலமாக காட்சியளிக்கக்கூடிய நிலையில், தீயணைப்பு பணியினர் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களைக் கொண்டுவந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக தீவிபத்து ஏற்பட்டுள்ள இடம், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் இடம் இல்லை எனவும், தடுப்பூசிகள் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு கிடங்குகள் பத்திரமாக உள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?