கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் டயர் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான டயர் உற்பத்தி தொழிற்சாலை இயங்குகிறது. சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த தொழிற்சாலையில் 4 சக்கரம் மற்றும் 2 சக்கர வாகனங்களுக்குத் தேவையான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய், பொன்னேரி ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
மேலும் தனியார் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் பீச்சி அடிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்களும் தொழிற்சாலை நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!