ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருக்கிறார். இதனிடையே இன்று இரவு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இதற்காக தலைநகர் டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் டெல்லி செல்ல இருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
மாலை 3 மணி அளவில் டெல்லி செல்லும் தமிழக முதல்வருக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள். தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு பாதுகாப்புடன் செல்ல இருக்கிறார்.
அங்கு இரவு ஓய்வு எடுக்கும் தமிழக முதல்வர் இரவு 7.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறார்.
Loading More post
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வைரல் புகைப்படம்: ராகுல் காந்தியிடம் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி