உளுந்தூர்பேட்டை பெரிய ஏரியில் கெட்டுப்போன மீன்களைக் கொட்டிச்சென்ற மர்ம நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனை எதிரே பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் முழுஅளவு தண்ணீர் இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள கால்நடைகளும் இந்த தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஏரியில் உள்ள தண்ணீரை மாசுபடுத்தும் வகையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கெட்டுப்போன மீன்களை ஏரியில் கொட்டிச் சென்றுள்ளனர். இதனால் சென்னை - சேலம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து முன்கூட்டியே கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கொட்டிய நபர்கள்மீது அரசு அதிகாரிகளும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'