இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை நாடு முழுவதும் அரசு தொடங்கியுள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இந்த பணியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவிலேயே முதல் நபராக டெல்லியை சேர்ந்த துப்பரவு பணியாளர் மணீஷ் குமாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அது ஏன் என்பதை விவரிக்கிறார் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா.
“நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, எங்கிருந்து வந்திருந்தாலும் பரவாயில்லை. கொரோனா பொதுமுடக்க நாட்களில் இந்த சமூகத்திற்கு நீங்கள் கொடுத்த பங்களிப்பை ஒருபோதும் மறக்க மாட்டோம். உங்களுக்கு என்றுமே நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என சொல்லிதான் மணீஷுக்கு தடுப்பூசியை செலுத்தினோம் என்கிறார் டாக்டர் ரன்தீப் குலேரியா.
நோய்த்தொற்று பரவலில் இருந்து தப்பிப்பதற்கான எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமல் கொரோனா தொற்று பரவியிருந்த பகுதிகளில் தன் உயிரை பணயம் வைத்து உழைத்தவர்தான் துப்புரவு பணியாளர் மணீஷ். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.
“கொரோனா தொற்று இந்தியாவில் தீயாக பரவிய சமயத்தில் களத்தில் எந்தவித பயிற்சியும் இல்லாமல் உழைத்த மக்கள்தான் நிஜ ஹீரோக்கள். அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக தான் மணீஷுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார் டாக்டர் ரன்தீப் குலேரியா.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!