ஜி 7 மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்பே இந்தியாவுக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்.
வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டின் கார்ன்வால் பிராந்தியத்தில் நடைபெறவிருக்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது. உலகின் ஏழு முன்னணி ஜனநாயக பொருளாதார நாடுகளான இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா - மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுதான் ஜி7 என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் திறந்த வர்த்தகம் போன்ற உலகளாவிய பிரச்னைகள் குறித்து இந்த ஜி 7 மாநாடு விவாதிக்கும் என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை கண்டறிந்ததன் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்விற்கான தனது இந்திய பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜி 7 மாநாட்டுக்கு முன்பே நாட்டிற்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவைத் தவிர, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய 3 நாடுகளும் உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளன.
Loading More post
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!